Thirukkuralagam
Kural 1163 of 1330

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து.

Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen Nonaa Utampin Akaththu

My soul, like porter's pole, within my wearied frame,Sustains a two-fold burthen poised, of love and shame

விளக்கம் — மு. வரதராசன்

துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

விளக்கம் — சாலமன் பாப்பையா

காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.

விளக்கம் — கலைஞர்

பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது

Meaning (English)

Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.

Open the interactive app →