Thirukkuralagam
Kural 1168 of 1330

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை.

Mannuyir Ellaam Thuyitri Aliththiraa Ennalladhu Illai Thunai

All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps

விளக்கம் — மு. வரதராசன்

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!

விளக்கம் — கலைஞர்

`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'

Meaning (English)

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

Open the interactive app →