Thirukkuralagam
Kural 1211 of 1330

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.

Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku Yaadhusey Venkol Virundhu

It came and brought to me, that nightly vision rare,A message from my love,- what feast shall I prepare

விளக்கம் — மு. வரதராசன்

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?

விளக்கம் — கலைஞர்

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?

Meaning (English)

Where with shall I feast the dream which has brought me my dear one’s messenger ?

Open the interactive app →