Thirukkuralagam
Kural 1212 of 1330

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.

Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku Uyalunmai Saatruven Man

If my dark, carp-like eye will close in sleep, as I implore,The tale of my long-suffering life I'll tell my loved one o'er

விளக்கம் — மு. வரதராசன்

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

விளக்கம் — கலைஞர்

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்

Meaning (English)

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my suferings to my lord.

Open the interactive app →