Kural 1213 of 1330
நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal Kaantalin Unten Uyir
Him, who in waking hour no kindness shows,In dreams I see; and so my lifetime goes
விளக்கம் — மு. வரதராசன்
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
விளக்கம் — கலைஞர்
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது
Meaning (English)
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.