Thirukkuralagam
Kural 1214 of 1330

கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.

Kanavinaan Untaakum Kaamam Nanavinaan Nalkaarai Naatith Thararku

Some pleasure I enjoy when him who loves not meIn waking hours, the vision searches out and makes me see

விளக்கம் — மு. வரதராசன்

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.

விளக்கம் — கலைஞர்

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது

Meaning (English)

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

Open the interactive app →