Thirukkuralagam
Kural 1215 of 1330

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.

Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan Kanta Pozhudhe Inidhu

As what I then beheld in waking hour was sweet,So pleasant dreams in hour of sleep my spirit greet

விளக்கம் — மு. வரதராசன்

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

விளக்கம் — கலைஞர்

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!

Meaning (English)

I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.

Open the interactive app →