Thirukkuralagam
Kural 1216 of 1330

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.

Nanavena Ondrillai Aayin Kanavinaal Kaadhalar Neengalar Man

And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove

விளக்கம் — மு. வரதராசன்

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

விளக்கம் — கலைஞர்

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே

Meaning (English)

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

Open the interactive app →