Thirukkuralagam
Kural 1217 of 1330

நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது.

Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal Enemmaip Peezhip Padhu

The cruel one, in waking hour, who all ungracious seems,Why should he thus torment my soul in nightly dreams

விளக்கம் — மு. வரதராசன்

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

விளக்கம் — சாலமன் பாப்பையா

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

விளக்கம் — கலைஞர்

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

Meaning (English)

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

Open the interactive app →