Thirukkuralagam
Kural 1218 of 1330

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal Nenjaththar Aavar Viraindhu

And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes haste

விளக்கம் — மு. வரதராசன்

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

விளக்கம் — கலைஞர்

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்

Meaning (English)

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

Open the interactive app →