Thirukkuralagam
Kural 1219 of 1330

நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.

Nanavinaal Nalkaarai Novar Kanavinaal Kaadhalark Kaanaa Thavar

In dreams who ne'er their lover's form perceive,For those in waking hours who show no love will grieve

விளக்கம் — மு. வரதராசன்

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

விளக்கம் — கலைஞர்

கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்

Meaning (English)

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

Open the interactive app →