Thirukkuralagam
Kural 1220 of 1330

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.

Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal Kaanaarkol Ivvoo Ravar

They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town;

விளக்கம் — மு. வரதராசன்

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

விளக்கம் — சாலமன் பாப்பையா

என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?

விளக்கம் — கலைஞர்

என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?

Meaning (English)

The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

Open the interactive app →