Kural 1223 of 1330
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.
Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith Thunpam Valara Varum
With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows
விளக்கம் — மு. வரதராசன்
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.
விளக்கம் — கலைஞர்
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது
Meaning (English)
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.