Thirukkuralagam
Kural 1225 of 1330

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை?

Kaalaikkuch Cheydhanandru Enkol Evankolyaan Maalaikkuch Cheydha Pakai?

O morn, how have I won thy grace? thou bring'st reliefO eve, why art thou foe! thou dost renew my grief

விளக்கம் — மு. வரதராசன்

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

விளக்கம் — சாலமன் பாப்பையா

காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

விளக்கம் — கலைஞர்

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது

Meaning (English)

What good have I done to morning (and) what evil to evening?

Open the interactive app →