Thirukkuralagam
Kural 1226 of 1330

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.

Maalainoi Seydhal Manandhaar Akalaadha Kaalai Arindha Thilen

The pangs that evening brings I never knew,Till he, my wedded spouse, from me withdrew

விளக்கம் — மு. வரதராசன்

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

விளக்கம் — கலைஞர்

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை

Meaning (English)

Previous to my husband’s departure, I know not the painful nature of evening.

Open the interactive app →