Kural 1227 of 1330
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.
Kaalai Arumpip Pakalellaam Podhaaki Maalai Malarumin Noi
My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour
விளக்கம் — மு. வரதராசன்
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
விளக்கம் — கலைஞர்
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்
Meaning (English)
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.