Thirukkuralagam
Kural 1236 of 1330

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.

Thotiyotu Tholnekizha Noval Avaraik Kotiyar Enakkooral Nondhu

I grieve, 'tis pain to me to hear him cruel chid,Because the armlet from my wasted arm has slid

விளக்கம் — மு. வரதராசன்

வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.

விளக்கம் — கலைஞர்

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்

Meaning (English)

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

Open the interactive app →