Thirukkuralagam
Kural 1237 of 1330

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து.

Paatu Perudhiyo Nenje Kotiyaarkken Vaatudhot Poosal Uraiththu

My heart! say ought of glory wilt thou gain,If to that cruel one thou of thy wasted arms complain

விளக்கம் — மு. வரதராசன்

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

விளக்கம் — சாலமன் பாப்பையா

நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?

விளக்கம் — கலைஞர்

நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

Meaning (English)

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

Open the interactive app →