Thirukkuralagam
Kural 1238 of 1330

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.

Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu Paindhotip Pedhai Nudhal

One day the fervent pressure of embracing arms I checked,Grew wan the forehead of the maid with golden armlet decked

விளக்கம் — மு. வரதராசன்

தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!

விளக்கம் — கலைஞர்

இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது

Meaning (English)

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.

Open the interactive app →