Thirukkuralagam
Kural 452 of 1330

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.

Nilaththiyalpaal Neerdhirin Thatraakum Maandharkku Inaththiyalpa Thaakum Arivu

The waters' virtues change with soil through which they flow; As man's companionship so will his wisdom show

விளக்கம் — மு. வரதராசன்

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

விளக்கம் — கலைஞர்

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்

Meaning (English)

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

Open the interactive app →