Thirukkuralagam
Kural 620 of 1330

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.

Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith Thaazhaadhu Ugnatru Pavar

Who strive with undismayed, unfaltering mind,At length shall leave opposing fate behind

விளக்கம் — மு. வரதராசன்

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

விளக்கம் — கலைஞர்

``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்

Meaning (English)

They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.

Open the interactive app →