Thirukkuralagam
Kural 839 of 1330

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.

Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan Peezhai Tharuvadhon Ril

Friendship of fools is very pleasant thing,Parting with them will leave behind no sting

விளக்கம் — மு. வரதராசன்

பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!

விளக்கம் — கலைஞர்

அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை

Meaning (English)

The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.

Open the interactive app →