Thirukkuralagam
Kural 840 of 1330

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.

Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror Kuzhaaaththup Pedhai Pukal

Like him who seeks his couch with unwashed feet,Is fool whose foot intrudes where wise men meet

விளக்கம் — மு. வரதராசன்

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

விளக்கம் — கலைஞர்

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது

Meaning (English)

The appearance of a fool in an assembly of the learned is like placing (one’s) unwashed feet on a bed.

Open the interactive app →