Thirukkuralagam
Kural 964 of 1330

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.

Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar Nilaiyin Izhindhak Katai

Like hairs from off the head that fall to earth,When fall'n from high estate are men of noble birth

விளக்கம் — மு. வரதராசன்

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

விளக்கம் — கலைஞர்

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்

Meaning (English)

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

Open the interactive app →